1932 - நெதர்லாந்தில், கடலுக்கு நடுவில், அஃப்ஸ்லூடிஜிக் என்ற தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டது. சுமார் கால் பங்கு நிலப்பரப்பைக் கடல்மட்டத்திற்கும் கீழான உயரத்தில் கொண்டுள்ள நெதர்லாந்து, உலகின் மிகத்தாழ்வான நாடுகளில் ஒன்றாகும். இதனால் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், கி.பி.முதல் நூற்றாண்டில் செயற்கை மலைகளை உருவாக்கி, அவற்றின்மீது கிராமங்களை அமைத்துக்கொண்டனர்